எங்களது சித்த ஞான சபையைப் போலவே குர்ரான் கூறியிருக்கும் ஞான வழியை உபதேசமாகக் கொடுக்கும் சபை ஒன்று தவநெறிக்கோட்டம் என்ற பெயரில் இருக்கிறது. அந்தத் தெய்வீக திருத்தலம் இருக்குமிடம் மதுரை இராமநாதபுரம் நெடுஞ்சாலையில் திருப்புவனத்திற்கும் மானா மதுரைக்கும் இடையே உள்ள இராஜ கம்பீரம் என்ற ஊரில் உள்ளது.
இங்கு கொடுக்கப்படும் உபதேசமும் எங்களது மச்ச முனிவரின் சித்த ஞான சபையில் கொடுக்கப்படும் உபதேசமும் ஒன்றே.அங்கிருந்து எனக்கு பொங்கல் விழாவுக்காக அனுப்பப்பட்ட அழைப்பை இங்கே ஒளி நகலாகத் தந்துள்ளேன்.
முஸ்லீம் அன்பர்கள் குர்ரான் என்ன சொல்லியுள்ளது என்பதை தெளிவாக பாவாவிடம் அறிந்து கொண்டு பிறவிப்பயன் அடைந்து ஞானத்தில் திளையுங்கள்.இது முஸ்லீம் அன்பர்களுக்கு எனது புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாளாம் பொங்கல் நல்வாழ்த்துக்களுடன் கூடிய அன்புப் பரிசு.
நன்றி
அன்புடன்
சாமீ அழகப்பன்
"வாழியாதன்! வாழியவினி!
ReplyDeleteநெற்பல பொலிக! பொன் பெரிது சிறக்க!"
"பால்பல ஊறுக! பகடுபல சிறக்க!"
பகைவர் புல் ஆர்க! பார்ப்பார் ஓதுக!
வேந்து பகைதணிக! யாண்டு பல நந்துக!
அறம்நனி சிறக்க! அல்லவை கெடுக!
நன்று நனிசிறக்க! தீதில்லாகுக!
அரசுமுறை செய்க! களவில்லாகுக!
மாரிவாய்க்க! வளம் நனி சிறக்க!"
திருவருளால் துன்பங்கள் நீங்கி மீண்டும் நல்வாழ்வு பெற வேண்டும்
YOUR'S
SHAREEF
பாவா ஷெரீஃப் அவர்களே,
ReplyDeleteஞானத்தால் பெருங்கவிஞர் ஆகிவிட்டீர்கள்!!!!பழந்தமிழில் பயின்று வந்தமை புலனாகின்றது???
நமது இணைய தளம் தயாராகி வருகின்றது.நமதன்பர் நாகமணி(விண்மனி வார்டுப்ரெஸ்)அவர்கள் தயாரித்துக் கொண்டிருக்கிறார்.தமிழர் திருநாளாம் பொங்கலுக்குக்காக காத்திருக்கிறது.ஆனால் இப்போதும் நீங்கள் காணலாம்.இணைப்பு இதோ http://www.machamuni.com/
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
மகிழ்ச்சியான செய்தி
ReplyDeleteஅய்யா,
ReplyDeleteபோகர் சித்தர் , திருமந்திரம் பாடல்களும் இந்தப்பதிவில் இணைக்கப்பட்டுள்ளன.
தாங்கள் அதற்கும் விளக்கம் கொடுத்தால் மிக்க மகிழ்ச்சியாக இருக்கும்.
ஓரளவுக்கு புரிந்தாலும் முழுதும் விளங்கவில்லை.
என்றும் அன்புடன்,
முத்துக்குமரன்
அய்யா,
ReplyDeleteபோகர் சித்தர் , திருமந்திரம் பாடல்களும் இந்தப்பதிவில் இணைக்கப்பட்டுள்ளன.
தாங்கள் அதற்கும் விளக்கம் கொடுத்தால் மிக்க மகிழ்ச்சியாக இருக்கும்.
ஓரளவுக்கு புரிந்தாலும் முழுதும் விளங்கவில்லை.
என்றும் அன்புடன்,
முத்துக்குமரன்